செய்திகள்

டால் மெமோரியல் செஸ் தொடர்: ஆனந்த் தோல்வி

Published On 2016-10-01 10:56 GMT   |   Update On 2016-10-01 10:56 GMT
ரஷ்யாவில் நடைபெற்று வரும் டால் மெமோரியல் சர்வதேச செஸ் தொடரில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார்.
ரஷ்யாவின் தலைநகர் கிளாஸ்கோவில் 10-வது டால் மெமோரியல் சர்வதேச டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்தியாவின் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், முன்னாள் உலகச் சாம்பியன் விளாடிமிர் கிராம்னிக்கை எதிர்கொண்டார்.

இந்த சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். 4 சுற்றுகள் முடிவில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி 3.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாட்சி 3 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். லி சயோ 2.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆனந்த், கிராம்னிக், லெவேன் அரோனியன், ஷக்ரியார் மமேத்யாரோவ் ஆகியோர் இரண்டு புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இன்னும் 5 சுற்றுகள் மீதமுள்ளது. இதன் முடிவில் முதல் இடம்பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 2 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும்.

Similar News