செய்திகள்

வுகான் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி

Published On 2016-10-01 07:43 GMT   |   Update On 2016-10-01 07:43 GMT
வுகான் ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்து, இரண்டாம் பரிசை பெற்றது.
சென்னை:

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடி வந்தார். சமீபத்தில் ஹிங்கிஸ் உடனான பார்ட்னர்ஷிப்பை முறித்துக் கொண்ட அவர், செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா உடன் இணைந்து விளையாடி வருகிறார்.

இந்த ஜோடி தற்போது வுகான் ஒபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று விளையாடிது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி நேற்று நடந்த காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சானியா ஜோடி, சமீபத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற லூசி சபரோவா-பெத்தானி மேட்டக் ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இப்போட்டியில் சானியா ஜோடி 1-6, 4-6 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தது. இரண்டு செட்களையும் அடுத்தடுத்து எளிதாக கைப்பற்றிய சபரோவா-பெத்தானி மேட்டக் ஜோடி சாம்பியன் கோப்பையை வென்றது.

Similar News