செய்திகள்

கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்னில் ஆல் அவுட்

Published On 2016-10-01 06:07 GMT   |   Update On 2016-10-01 07:36 GMT
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
கொல்கத்தா:

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. புஜாரா-ரகானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. புஜாரா 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரகானே 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த அஸ்வின் 33 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. சகா 14 ரன்னுடனும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சகா, அரை சதம் கடந்தார். ஜடேஜா (14), புவனேஸ்வர் குமார் (5), ஷமி (14) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 316 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சகா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஹென்றி மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். டிரென்ட் போல்ட்,வாக்னர், ஜீத்தன் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

Similar News