செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து சாகித் அப்ரிடி நீக்கம்

Published On 2016-09-28 11:31 GMT   |   Update On 2016-09-28 11:32 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து சீனியர் வீரர்களான சாகித் அப்ரிடி, சயீத் அஜ்மல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த 36 வயதாகும் அதிரடி வீரர் சாஹித் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் டி20 போட்டியில் மட்டும் விளையாடி வரும் அப்ரிடி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து அப்ரிடி மற்றும் அஜ்மல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2016-17-ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரத்தை வெளியிட்டு உள்ளது. சீனியர் வீரர்களான அப்ரிடி, சயித் அஜ்மல் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

12 மாதத்துக்கான ஒப்பந்த பட்டியலில் இந்த இருவரது பெயரும் இடம் பெறவில்லை. அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத நிலையில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News