செய்திகள்

இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தலைவராக ஸ்பைஸ்ஜெட் சேர்மன் அஜங் சிங் தேர்வு

Published On 2016-09-25 11:43 GMT   |   Update On 2016-09-25 11:43 GMT
இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தலைவராக ஸ்பெஸ்ஜெட் சேர்மன் அஜங் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பாக்சிங் பெடரேசன் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையில் ஸ்பைஸ்ஜெட் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனருமான அஜங் சிங் 49 வாக்குகள் பெற்று தலைவர் போட்டியில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ரோகித் ஜைனேந்திரா ஜெயின் 15 வாக்குகளே பெற்றார். 3-வது நபராக போட்டியிட்ட ஹரியானாவின் ராகோ தக்ரான 4 வாக்குகளை பெற்றார்.

பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மகாராஷ்டிராவின் ஜெய் கௌலி 48 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லென்னி டி'காமா 12 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்த தேர்தல் சர்வதேச குத்துச்சண்டை ஆசோசியேசன்சின் டேனர் மற்றும் இந்திய விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர் ஆகியோர் இந்த தேர்தலின் பார்வையாளராக செயல்பட்டனர்.

Similar News