செய்திகள்
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் சென்னை வந்தார்: விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு
பாராலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் இன்று சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.
சென்னை:
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருடன் சேர்த்து பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைவரும் நேற்று தாயகம் திரும்பினர்.
டெல்லியில் அவர்கள் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில் மாரியப்பன் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத் துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.