செய்திகள்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது வெற்றி யாருக்கு?

Published On 2016-08-30 03:34 GMT   |   Update On 2016-08-30 03:34 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் மதுரை அணியை தோற்கடித்து இருந்தது. அமெரிக்காவில் சர்வதேச போட்டியில் ஆடிய அந்த அணியின் கேப்டன் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் இன்று காலை சென்னை திரும்புகிறார். அவர் உடனடியாக களம் இறங்குவாரா? இல்லையா? என்பது உறுதிபடுத்தப்படவில்லை. அவர் ஆடினால், நிச்சயம் திண்டுக்கல் அணி பலம் வாய்ந்ததாக மாறி விடும்.

அதே நேரம் தொடக்க ஆட்டத்தில் ‘சூப்பர் ஓவர்’ முறையில் கோவை கிங்சை வீழ்த்திய காஞ்சி வாரியர்ஸ் அணி மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே ஆட இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு உற்சாகம் அளிக்கும். இரண்டாவது வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Similar News