இந்தியா
மனைவியுடன் தகராறில் நாட்டு வெடிகுண்டை கடித்து வாலிபர் தற்கொலை
- மனைவி பிரிந்து சென்றதால் சிரஞ்சீவி குடிப்பழத்துக்கு அடிமையானார்.
- சிரஞ்சீவி வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கடித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காட்டம் வாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 35). இவருடைய மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
இதனால் இவருடைய மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் சிரஞ்சீவி குடிப்பழத்துக்கு அடிமையானார். நேற்று மதுபோதையில் இருந்த சிரஞ்சீவி வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கடித்தார். அது வெடித்து சிதறியது. இதில் சிரஞ்சீவி முகம் சிதைந்தது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து பங்காரு பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.