இந்தியா

பாலக்காடு அருகே 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதரசா ஆசிரியர் கைது

Published On 2022-08-23 08:26 GMT   |   Update On 2022-08-23 08:26 GMT
  • மதரசாவுக்கு சென்று வந்த 14 வயது சிறுவனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.
  • இதனை கவனித்த பெற்றோர், அந்த சிறுவனிடம் கேட்ட போது அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கருகாபுத்தூர் அருகே மதரசா கூடம் உள்ளது.

மதரசாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் சென்றான். அங்கு சென்று வந்த பின்பு அந்த சிறுவனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.

இதனை கவனித்த பெற்றோர், அந்த சிறுவனிடம் கேட்ட போது அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். இதையடுத்து பெற்றோர் அந்த சிறுவனை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்ட போது, மதரசாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

அங்குள்ள ஆசிரியர் ஒருவரே சிறுவனுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் சாலிசேரி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மதரசா ஆசிரியர் இர்ஷாத் அலி என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இர்ஷாத் அலி தமிழகத்தை சேர்ந்தவர் என தெரிகிறது.

மேலும் இதே மதரசாவில் பணிபுரியும் இன்னொரு ஆசிரியர் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News