இந்தியா

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்- சிறுமி உள்ளிட்ட 5 பேர் பலி

Published On 2023-03-10 15:24 GMT   |   Update On 2023-03-10 15:24 GMT
  • முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற கார், அந்த லாரி மீது மோதியது.
  • அடுத்த ஓரிரு வினாடிகளில் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியது.

பலோட்:

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டம் மார்கோடலா கிராமத்தின் அருகே இன்று கார், லாரி, மோட்டார் சைக்கிள் என மூன்று வாகனங்கள் அடுத்துடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.

முதலில் பலோட்டில் இருந்து பானுபிரதாபூர் நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. அடுத்த ஓரிரு வினாடிகளில் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து டவுண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News