இந்தியா

கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்

Published On 2022-06-23 07:23 GMT   |   Update On 2022-06-23 07:23 GMT
  • நிலநடுக்கம் குடகு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் உணரப்பட்டது.
  • நிலநடுக்கத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஹபூன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாவட்டத்தில் உள்ள மாலுகனஹஸ்ஸ கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது என்று பேரிடர் மேலாண்மை தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் குடகு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News