இந்தியா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு- டெல்லியில் இன்று நடைபெறுகிறது

Published On 2022-04-29 01:05 GMT   |   Update On 2022-04-29 01:05 GMT
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை, டெல்லியில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் 39-வது மாநாடு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை முன்னுரிமை அடிப்படையில் இணையம் வழியாக இணைப்பது, மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான மனித வளம், நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், நீதிசார் சீர்திருத்தங்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

25 உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, நாளை,  டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில்  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News