இந்தியா
உக்ரைன் விவகாரம் - மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தணிந்துவிட்டதால், இரு அவைகளும் தற்போது ஒரே நேரத்தில் நடக்கின்றன.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 15-ம் தேதி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைன் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...முன்விரோதத்தால் நண்பனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன் கைது