இந்தியா
அருணாசல பிரதேசத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் இன்று இரவு 9.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தின் பான்கினில் இருந்து தெற்கே இன்று இரவு 9.51 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
இதையும் படியுங்கள்...உ.பி முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்