இந்தியா
நேதாஜியின் பங்களிப்பிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கற்களாலான பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி:
ஆங்கிலேயருக்கு எதிராக ராணுவ வீரர்களை திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது :-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலிகள். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான். நான் நேதாஜியிடம் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.