இந்தியா
பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு சந்திப்பு: முலாயம்சிங்கிடம் ஆசி பெற்ற இளைய மருமகள்
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு முலாயம்சிங்கை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
லக்னோ :
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லியில் இருந்து லக்னோ திரும்பினார். லக்னோ விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள, தாளங்களுடன் மலர்களை தூவி வரவேற்றனர்.
இந்தநிலையில் நேற்று முலாயம்சிங்கை அபர்ணா யாதவ் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள அபர்ணா யாதவ், முலாயம்சிங்கிடம் ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லியில் இருந்து லக்னோ திரும்பினார். லக்னோ விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள, தாளங்களுடன் மலர்களை தூவி வரவேற்றனர்.
இந்தநிலையில் நேற்று முலாயம்சிங்கை அபர்ணா யாதவ் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள அபர்ணா யாதவ், முலாயம்சிங்கிடம் ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.