இந்தியா
ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமின்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்த புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் கைதான அவர் தமிழகம் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தனர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள், “அரசியல் உள்நோக்கத்தோடு அவசரம் அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றம் சாட்டினர்.
அப்போது நீதிபதிகள், “ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்களை துன்புறுத்தியது ஏன்? முன்ஜாமின் மனு விசாரணையில் இருந்த போது அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொண்டது ஏன்? என்பது போன்ற சரமாரியான கேள்விகளை எழுப்பினார்கள்.
அப்போது போலீசாரின் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு 4 வார இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 7 நாட்களாக சிறையில் உள்ள ராஜேந்திர பாலாஜி விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்த புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் கைதான அவர் தமிழகம் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தனர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள், “அரசியல் உள்நோக்கத்தோடு அவசரம் அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றம் சாட்டினர்.
அப்போது நீதிபதிகள், “ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்களை துன்புறுத்தியது ஏன்? முன்ஜாமின் மனு விசாரணையில் இருந்த போது அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொண்டது ஏன்? என்பது போன்ற சரமாரியான கேள்விகளை எழுப்பினார்கள்.
அப்போது போலீசாரின் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு 4 வார இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 7 நாட்களாக சிறையில் உள்ள ராஜேந்திர பாலாஜி விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாக தான் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை