இந்தியா
கோப்புப் படம்

ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

Published On 2021-12-18 23:59 GMT   |   Update On 2021-12-18 23:59 GMT
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹர்வான் பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News