இந்தியா
திருமணம்

குஜராத்: 135 ஜோடிகளுக்கு திருமணம் செய்த வைத்த தொழில் அதிபர்

Published On 2021-12-05 02:18 GMT   |   Update On 2021-12-05 02:18 GMT
ஒவ்வொரு வருடமும் ஏழை ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கி திருமணம் செய்து வைக்கிறார் தொழில் அதிபர் மகேஷ் சவானி.
குஜராத் மாநிலம் சூர்த்தை சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் மகேஷ் சவானி. இவர் வருடந்தோறும் அனாதை பெண்களுக்கு  தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்கிறார்.



திருமணம் மட்டும் செய்து வைப்பதோடு நிற்காமல், சீர்வரிசை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.



இந்த வகையில் இன்று 135 அனாதை பெண்களுக்கு  இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.



இதில் மூன்று இஸ்லாமிய மற்றம் ஒரு கிறிஸ்தவ ஜோடியும் அடங்கும்.
Tags:    

Similar News