இந்தியா
பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியை மையமாக வைத்தே பிரசாரம் -பிரியங்கா காந்தி

Published On 2021-12-02 11:13 GMT   |   Update On 2021-12-02 11:13 GMT
உத்தர பிரதேச மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பிரியங்கா குறிப்பிட்டார்.
மொரதாபாத்:

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மொரதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி எந்த மரியாதையும் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். 

உத்தரப்பிரதேச வளர்ச்சியை மையமாக வைத்தே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது என்றார். அந்த மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பிரியங்கா தமது பேச்சில் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News