இந்தியா
நீதிமன்றம்

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 46 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2021-12-01 09:17 GMT   |   Update On 2021-12-01 09:17 GMT
கேரளாவில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 46 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பட்டாம்பி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த எழுவந்தலாவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 47).

இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனந்த் மீதான வழக்கு பட்டாம்பி விரைவு கோர்ட்டில் நடந்தது. இதில் 15 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. வழக்கு தொடர்பான 19 ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்துக்கு 46 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News