செய்திகள்
இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் டுவிட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திரா காந்தி 1966-ம் ஆண்டு மற்றும் 1977-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்திலும், பின்னர் 1980-ம் ஆண்டு மற்றும் 1984-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் பிரதமராக இருந்தார்.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் டுவிட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தி 1966-ம் ஆண்டு மற்றும் 1977-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்திலும், பின்னர் 1980-ம் ஆண்டு மற்றும் 1984-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் பிரதமராக இருந்தார்.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் டுவிட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. 580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம் - இந்தியாவின் வடமாநிலங்களில் காணலாம்