செய்திகள்
உண்மை பேசினால் தண்டனை கிடைக்கும்போது, பொய் ஆட்சியில் உள்ளது: ராகுல் காந்தி தாக்கு
தேசிய பத்திரிகை தினத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா மீது விமர்சனம் செய்துள்ளார்.
நவம்பர் 16-ந்தேதியான இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பத்திரிகை தினத்தன்று ராகுல் காந்தி பா.ஜனதா அரசை விமர்சனம் செய்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள செய்தியில் ‘‘அங்கு உண்மை பேசினால் தண்டனை கிடைக்கும்போது, பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது’’ என விமர்சனம் செய்துள்ளார்.