செய்திகள்
சுப்ரதா முகர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்

Published On 2021-11-04 21:26 GMT   |   Update On 2021-11-04 21:26 GMT
மேற்கு வங்காள மாநில பஞ்சாயத்து துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் சுப்ரதா முகர்ஜி.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகர்ஜி, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75.

தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி சுப்ரதா முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார். சுப்ரதா முகர்ஜியின் இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தா முன்னாள் மேயர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் சுப்ரதா முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News