செய்திகள்
பிரியங்கா காந்தி

பெண்களுக்கு கியாஸ் சிலிண்டர், மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி - பிரியங்கா தேர்தல் வாக்குறுதி

Published On 2021-11-01 08:49 GMT   |   Update On 2021-11-01 13:52 GMT
உத்தரபிரதேச சட்டசபை தேர்ததலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஸ்களில் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் நாள்தோறும் அதிரடியான தேர்தல் வாக்குறுதியை அளித்து அசத்தி வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு வருடந்தோறும் 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.


காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஸ்களில் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும். விதவைகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு பிரியங்கா அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் அடைப்பு

Tags:    

Similar News