செய்திகள்
கனமழை

திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Published On 2021-10-30 18:53 GMT   |   Update On 2021-10-30 18:53 GMT
கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை  காரணமாக கடந்த பல நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு வரும் 1-ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும். இங்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News