செய்திகள்
மாணவர்கள் நூதன போராட்டம்

தெலுங்கானாவில் ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் மருத்துவர்கள்

Published On 2021-10-27 04:06 GMT   |   Update On 2021-10-27 04:06 GMT
சீலிங் ஃபேன் விழுந்து டாக்டர் காயம் அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜூனியர் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் தோல் பிரிவு பெண் மருத்துவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் விசிறி அவரது தலையைில் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூனியர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மவுன போராட்டம் நடத்தி, கண்காணிப்பாளரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
Tags:    

Similar News