செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 18,132 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தற்போது 2,27,347 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 18,132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 193 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 3,32,93,478 பேர் குணமடைந்துள்ளனர். 4,50,782 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2,27,347 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 95,19,84,373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.