செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 10,691 பேருக்கு கொரோனா: 85 பேர் பலி
கேரளாவில் தற்போது வரை 1,11,083 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,655 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 46,56,866 பேர் குணமடைந்துள்ளனர். 26,258 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 1,11,083 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 81,914 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.