செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்த பஞ்சாப் முதல் மந்திரி

பிரதமர் மோடியை சந்தித்தார் பஞ்சாப் முதல் மந்திரி

Published On 2021-10-01 13:06 GMT   |   Update On 2021-10-01 13:06 GMT
பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித்சிங் சன்னி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:

பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங் உட்கட்சி பூசல் விவகாரத்தால் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து புதிய முதல் மந்திரியாக சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் அலுவலக இல்லம் சென்றிருந்த பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித்சிங் சன்னி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலக டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News