செய்திகள்
கோப்புப்படம்

கற்பை சூறையாடியவருக்கு ஜாமீன்: விரக்தியில் 16 வயது இளம்பெண் தற்கொலை

Published On 2021-09-15 15:29 GMT   |   Update On 2021-09-15 15:29 GMT
தனது கற்பை சூறையாடிய கொடூரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதே என்ற விரக்தியில், 16 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தந்தை, வளர்ப்பு தாய் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்தவர் 16 வயது இளம்பெண். இவர் வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் முன்பே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் விரக்தியடைந்தார். இதனால் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
Tags:    

Similar News