செய்திகள்
பிரதமர் மோடி

குஜராத் மாநில சோமநாதபுரத்தில் பார்வதி கோவில்- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Published On 2021-08-20 10:39 GMT   |   Update On 2021-08-20 10:39 GMT
குஜராத் மாநிலம் சோமநாதபுரத்தில் பார்வதி தேவிக்கு தனி கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நட்டு வைத்தார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சோமநாதபுரத்தில் உள்ள கடற்கரையில் நடைபாதை, கண்காட்சி மையம், பழைய சோமநாதர் கோவில் மாதிரி கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இவற்றை தொடங்கி வைத்தார். மேலும் சோமநாதபுரத்தில் பார்வதி தேவிக்கு தனி கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லையும் பிரதமர் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா, முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். சோமநாதர் ஆலய அறக்கட்டளை மூலம் இந்த பணிகள் நடக்கின்றன. இதன் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News