செய்திகள்
75வது சுதந்திர தினம்- கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றினார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் அந்த மாநில அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் முதல்வர்கள் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்தனர். இது தவிர அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
இதையும் படியுங்கள்... நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் -பிரதமர் மோடி சுதந்திர தின உரை