செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

75-வது சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்

Published On 2021-08-13 20:41 GMT   |   Update On 2021-08-13 20:41 GMT
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

முதலில் இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றுகிறார். அதன்பின், அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் ஜனாதிபதியின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
Tags:    

Similar News