செய்திகள்
கோப்புப்படம்

பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு

Published On 2021-07-31 09:53 GMT   |   Update On 2021-07-31 10:59 GMT
பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளளது.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பஞ்சாபில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தியது. 

இந்நிலையில், பஞ்சாபில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 2ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த 20-ந்தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ந்தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News