செய்திகள்
புல்டோசரை ஏற்றி போதைப்பொருட்களை அழித்த அசாம் முதல்வர்
அசாமில் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாகான்:
அசாம் மாநிலத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவ்வகையில், கடந்த ஓரிரு மாதங்களில் 170 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் அழிக்கப்படுகின்றன. நேற்று திபு மற்றும் கோலாகாட் பகுதியில் சில வகைப் போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. போதைப்பொருட்களுக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நெருப்பு வைத்தார்.
#WATCH | Assam Chief Minister Himanta Biswa Sarma drives a bulldozer during a programme on 'Seized Drugs Disposal' in Nagaon. pic.twitter.com/3iNc3Ud3BY
— ANI (@ANI) July 18, 2021
இதேபோல் இன்று நாகான் மற்றும் ஹோஜாய் பகுதியில் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. நாகோனில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, புல்டோசரை போதைப்பொருட்கள் மீது ஏற்றி அவற்றை அழித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.