செய்திகள்
கோப்புப் படம்

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

Published On 2021-07-12 17:58 GMT   |   Update On 2021-07-13 01:51 GMT
கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். 

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசால் மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம்.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7-வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. கேரளாவில் இதுவரை 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிப்புக்கு உள்ளான 73 வயது பெண் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
Tags:    

Similar News