செய்திகள்
கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு 15ஆக உயர்வு
சிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு 15ஆக உயர்ந்துள்ளது. சிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்...முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு