செய்திகள்
நிலநடுக்கம்

மணிப்பூரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2021-07-09 01:14 GMT   |   Update On 2021-07-09 02:24 GMT
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. 

கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News