செய்திகள்
அனைத்துக் கல்லூரிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கட்டாயம்: ஆந்திர அரசு முடிவு
அரசு, தனியார் உதவி பெறும் என அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை உருவாக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘அனைத்து அரசு, தனியார் உதவி, உதவி பெறாத பட்டப்படிப்பு கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழிக்கல்வியை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.