செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் ஊரடங்கு நீட்டிப்பு -மலப்புரத்தில் மட்டும் மும்மடங்கு ஊரடங்கு வாபஸ்

Published On 2021-05-29 16:07 GMT   |   Update On 2021-05-29 16:07 GMT
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மும்மடங்கு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் மும்மடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

மலப்புரம் மாவட்டத்தில் மும்மடங்கு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும்  பினராயி விஜயன் அறிவித்தார்.
Tags:    

Similar News