செய்திகள்
நளின்குமார் கட்டீல்

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை: நளின்குமார் கட்டீல் பேட்டி

Published On 2021-05-29 02:44 GMT   |   Update On 2021-05-29 02:44 GMT
மந்திரி சி.பி.யோகேஷ்வரின் கருத்துகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவர் பகிரங்கமாக ஆட்சியை பற்றி குறை கூறியது சரியல்ல.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதை பா.ஜனதா தலைவர்கள் மறுத்துள்ளனர். சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தனது துறை விஷயங்களில் தலையிடுவதாக மறைமுகமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை மற்றும் திட்டம் இல்லை. இதை எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர். மந்திரி சி.பி.யோகேஷ்வரின் கருத்துகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவர் பகிரங்கமாக ஆட்சியை பற்றி குறை கூறியது சரியல்ல.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Tags:    

Similar News