செய்திகள்
கேரளாவில் காங்கிரஸ் தலைவர் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் மோசடி
மர்ம நபர்கள் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முன்னாள் மத்திய மந்திரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இந்த நிலையில் மர்ம நபர்கள் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி தனக்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் அந்த பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் பணம் அனுப்பினர். இதுதொடர்பாக சிலர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது தான் பேஸ்புக் கணக்கில் பணம் அனுப்புமாறு எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
அப்போதுதான் அது போலியான பேஸ்புக் கணக்கு என்பது தெரிய வந்தது. இதுபோல் தலைசேரி பகுதியை சேர்ந்த நவுசாத் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முன்னாள் மத்திய மந்திரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இந்த நிலையில் மர்ம நபர்கள் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி தனக்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் அந்த பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் பணம் அனுப்பினர். இதுதொடர்பாக சிலர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது தான் பேஸ்புக் கணக்கில் பணம் அனுப்புமாறு எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
அப்போதுதான் அது போலியான பேஸ்புக் கணக்கு என்பது தெரிய வந்தது. இதுபோல் தலைசேரி பகுதியை சேர்ந்த நவுசாத் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.