செய்திகள்
நந்திகிராம் பகுதியில் ஆளுநர் ஆய்வு

மேற்கு வங்காள தேர்தல் வன்முறை- நந்திகிராம் பகுதியில் ஆளுநர் ஆய்வு

Published On 2021-05-15 08:35 GMT   |   Update On 2021-05-15 08:35 GMT
மேற்கு வங்காளம் நந்திகிராம் பகுதியில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநர் ஜெகதீப் தங்கார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகின்றன.



இந்நிலையில், மேற்கு வங்காளம் நந்திகிராம் கிராமத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடந்த இடத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கார் இன்று ஆய்வு செய்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநர் ஜெகதீப் தங்கார் சந்தித்து ஆறுதல் கூறினார்.






Tags:    

Similar News