செய்திகள்
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவுக்கு பலி- மம்தா அதிர்ச்சி

Published On 2021-04-25 06:51 GMT   |   Update On 2021-04-25 06:51 GMT
காஜல் சின்ஹா, தனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்ததாக மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நாளை 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவால் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மம்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மிக மிக வேதனையாக இருக்கிறது. அதிர்ச்சி அடைந்தேன். கர்தாகா தொகுதியில் போட்டியிட்ட எங்கள் வேட்பாளர் காஜல் சின்ஹா கொரோனாவுக்கு பலியாகிவிட்டார். அவர் தனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார். சளைக்காமல் பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் நீண்ட காலமாக கட்சிப்பணியாற்றினார். நாங்கள் அவரை இழக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் அவரது அதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு மம்தா கூறி உள்ளார்.
Tags:    

Similar News