செய்திகள்
சத்தீஸ்கர்: உதவி சப்-இன்ஸ்பெக்டரை கடத்திய நக்சலைட்டுகள்
சத்தீஸ்கர் மாநிலம் பிஜபுர் மாவட்டத்திற்குள்ளான காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை நக்சலைட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு வீரரரை பிணைக்கைதியாக கடத்தி சென்றனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வீரர் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் பிஜபுர் மாவட்டம், கங்லுர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பல்நார் கிராமத்தில் இருந்து வந்த நக்சலைட்டுகள் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை கடத்தியுள்ளனர்.