செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு

Published On 2021-04-16 09:23 GMT   |   Update On 2021-04-16 09:23 GMT
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.
பெங்களூரு:

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு லேசான காய்ச்சலால் பாதிப்பு இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பாதிப்பு எதுவும் இல்லை. 

அதன்பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மணிபால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.



கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதிக்கப்படுவது இரண்டாவது முறை ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தடுப்பூசி திட்டம் தொடங்கியதும், மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய சிங், ஷிரோமணி அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News