செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு- முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2021-04-15 08:10 GMT   |   Update On 2021-04-15 08:10 GMT
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.



* டெல்லியில் வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும்.

* வார இறுதி நாட்களான சனி, ஞாயிறன்று உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி.

* வார இறுதி நாட்களில் தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்படாது.

* ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News