செய்திகள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 டாக்டர்கள், 6 மாணவர்களுக்கு கொரோனா
எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களில் 20 டாக்டர்கள், 6 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என செய்தி வெளியானது.
இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 டாக்டார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்ட டெஸ்டில் இந்த முடிவு வந்துள்ளது.
கூடுதலாக 6 எம்பிபிஎஸ் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.