செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

கேரளாவில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 18 பேர் பலி

Published On 2021-04-08 14:57 GMT   |   Update On 2021-04-08 14:57 GMT
கேரளாவில் இன்று மேலும் 4 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 205 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 10 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News